districts

பழங்குடி பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு அவமரியாதை: மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்

திருவள்ளூர், மார்ச் 8- திருவள்ளூர் அருகே அதிகத்தூர் ஊராட்சியில் பழங்குடி பெண் ஊராட்சி மன்ற தலைவர்  அவமரியாதை செய்துள்ளதை, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. திருவள்ளூர் வட்டத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் ஊராட்சியில் பழங்குடி இன பெண் பிரியா என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார்.  இந்த நிலையில் புதனன்று (மார்ச் 8) அதிகத்தூர் ஊராட்சியில் தனியார் தொண்டு  நிறுவனம் ஒன்று  சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. இதில்  மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள உள்ளார் என்று அழைப்பிதழ் அச்சிடப்பட்டு உள்ளது. மேற்கண்ட மகளிர் தின அழைப்பிதழில் பழங்குடி இன பெண் ஊராட்சி தலைவர் பிரியா பெயரை அழைப்பிதழில் போடாமல் புறக்கணித்து, அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.  இதனை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் இப்படி திட்டமிட்டு அவமரியாதை செய்த தொண்டு நிறுவனத்தின் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பழங்குடி இன  மக்களை பல்வேறு வகையில் அவமரி யாதை செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியர்  ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்அரசன்  வலியுறுத்தியுள்ளார்.