districts

img

குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறை திறப்பு

திருவள்ளூர், ஏப்.22 - கூனம் குப்பத்தில்  குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறையை வெள்ளியன்று (ஏப். 22) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார். பழவேற்காடு அடுத்த கூனம்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தனியார் சமூக சேவை நிறுவனம் ஸ்மார்ட்  வகுப்புகளுடன், குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறையை அமைத்துள்ளது. இந்த மையத்தை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து பேசும்போது, மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் முன்மாதிரி ஸ்மார்ட் வகுப்பு முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், நேர்முக உதவியாளர் பாலமுருகன், மாவட்ட விளையாட்டு கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவூர், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியை முருகம்மை மற்றும் சுதா தொண்டு நிறுவன நிர்வாகி கீதா தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.