திருப்பூர், ஏப். 5 - அபரிமிதமாக உயர்ந்து வரும் பருத்தி நூல் விலையைக் கட்டுப் படுத்த, பருத்தி இறக்குமதி வரி 11 சதவிகிதத்தை நீக்க வேண்டும் என்று அனைத்து ஜவுளி அமைப்பி னர் மத்திய ஜவுளி அமைச்சர் பியூஸ் கோயலிடம் நேரில் வலியுறுத்தி உள்ளனர். புதுதில்லியில் ஜவுளி மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயலை திங்களன்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்ட பல் வேறு அமைப்பினர் நேரில் சந் தித்துப் மனு அளித்தனர். அப்போது அவர்கள் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, மதிப்புக் கூட்டப் பட்ட பின்னலாடை பிரிவு உள்ளிட்ட மொத்த ஜவுளித் தொழில் துறை யும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பருத்தி விலை உயர்ந் திருப்பதால், தற்போது கடும் சிக்க லான சூழ்நிலையை சந்தித்து வரு கின்றன. கடந்த மார்ச் மாதம் ஒரு கண்டி பஞ்சு விலை ரூ.95 ஆயிரமாக உயர்ந்திருந்தது. அது கூடிய விரை வில் ரூ.1 லட்சத்தை எட்டக்கூடிய சூழல் உள்ளது. அதன் தொடர்ச்சி யாக நூற்பாலைகள் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி நூல் விலையை கிலோ வுக்கு ரூ.30 உயர்த்தி உள்ளனர். இதன் விளைவாக மதிப்புக் கூட்டப் பட்ட பின்னலாடை துறையும் நெருக் கடியைச் சந்திக்கிறது. தற்போது ஜவுளி தொழில் துறை யினரின் அதிர்ஷ்டம் என்பது பருத்தி விவசாயிகளின் எதிர்காலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக பருத்தி வர்த்த கர்கள் இப்பிரச்சனையில் தலை யிட்டு ஒட்டுமொத்த ஜவுளித் தொழி லையும் சீர்குலைக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. அத்துடன் பின்ன லாடை துறை, வேலை வாய்ப்பு மற் றும் வங்கித் துறையும் பாதிப்பைச் சந்திக்கிறது. ஏற்கெனவே, ஆர்டர் கள் பெறும்போதே ஒப்புக் கொண்ட விலைக்குத்தான் பின்னலாடை களை அனுப்பும் நிலை உள்ளது. ஒரு சில வெளிநாட்டு வர்த்தகர் களைத் தவிர பிறர் கூடுதல் விலை கொடுக்க முன்வருவதில்லை. அதே சமயம் விலை உயர்த்தப்பட் டால், வர்த்தகர்கள் நம் போட்டி நாடு களாக உள்ள வங்கதேசம், வியட் நாம், கம்போடியா, துருக்கி உள் ளிட்ட நாடுகளுக்கு சென்று ஆடை கொள்முதல் செய்யத் தொடங்கி விடுகின்றனர். தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கடந்த ஆண்டை விட குறைவான எண்ணிக் கையிலேயே ஆடைகள் ஆர்டர் வந் துள்ளன. எனவே கடுமையாக அதிக ரித்து வரும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த 11 சதவிகித இறக்கு மதி வரியை நீக்க வேண்டும். இதன்மூலம் பஞ்சு விலையைக் கட் டுப்படுத்தும் வகையில் 40 லட்சம் பேல்கள் இங்கு வரத்து வரும், அதேசமயம் பருத்தி விவசாயிக ளும் பாதிக்க மாட்டார்கள். அத்து டன் பதுக்கல், ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்த இத்தொழில் சார்ந்த அனைத்து துறையினரும் தங்கள் வசம் உள்ள பருத்தி இருப்பு விப ரத்தை வெளிப்படையாக தெரிவிப் ்பது அவசியம் என்று அறிவிக்க வேண்டும். 95 சதவிகிதம் சிறு, குறு, நடுத்தர தொழிலகங்கள் இருக்கும் நிலையில் பண தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு ஈசிஎல்ஜிஎஸ் என் பது போன்ற திட்டத்தை அம லாக்க வேண்டும் என்று ஜவுளித் தொழில் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.