districts

நாச்சியார்கோயில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் குப்பைமேடு அப்புறப்படுத்தப்படுமா? சிபிஎம், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கும்பகோணம், ஏப்.24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாச்சியார்கோயில் ஊராட்சி யில், குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல்  தெரிவித்ததாவது: நாச்சியார்கோயில் ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்கள், ஹோட்டல்கள்  மற்றும் திருமண மண்டபங்களின் குப்பைகள் சாலையில் சுடுகாடு அருகே  கொட்டப்பட்டு வந்தன. ஆனால் போதிய  இடம் இல்லாததால், ஊரின் குடியி ருப்பு பகுதியான நாச்சியார்கோயில் பாரதிநகரில் கொட்டப்பட்டு, குப்பை களை பிரித்து உரக் கிடங்கிற்கு எடுத்துச்  செல்லப்படுகிறது. சில நேரங்களில் குப்பை அதிகமாக சேர்ந்து மலை போல்  காட்சியளிக்கிறது.  இந்நிலையில் துப்புரவு தொழிலா ளர்கள், அந்த குப்பைகளை தீயிட்டு  கொளுத்திச் செல்கின்றனர். இதனால்  எந்நேரமும் இப்பகுதி புகை மண்டல மாக இருக்கிறது. இப்பகுதியில் குடியி ருக்கும் பொதுமக்கள், துர்நாற்றம் தாங்க முடியாமல் சிரமத்தில் வாழும் நிலையில் உள்ளனர். இப்பகுதியில் தான் வருவாய் அலுவலர் அலுவலகம், கிளை நூலகம், நெல் கொள்முதல் நிலையம், வாரச்சந்தை உள்ளிட்டவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஊரக உள்ளாட்சி துறை சார்பில் தூய்மையாக இருக்க பணிகள் நடை பெற்றாலும், இதுபோன்ற குப்பை பிரச்ச னையால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே ஊரக உள்ளாட்சி துறை போர்க்கால அடிப்படையில் நாச்சியார் கோயில் ஊராட்சிக்கென நிரந்தரமாக, மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களை  தேர்வு செய்து, அன்றாடம் சேகரிக்கப் பட்ட குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி சுய உதவி குழுக்கள் மூலம் மறுசுழற்சி முறையில் குப்பை களை பிரித்து அனுப்பிட தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.