districts

பள்ளி அருகே இருந்த பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடித்து அகற்றம்

தஞ்சாவூர், பிப்.8 - தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காட்டில் பள்ளிக்கூடம் அருகே பாது காப்பற்ற நிலையில், பய னற்ற மேல்நிலை நீர்த்தேக் கத் தொட்டி ஞாயிறன்று பொக்லைன் இயந்திரம் மூலம் பாதுகாப்பாக இடித்து அகற்றப்பட்டது. வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப் பள்ளி அருகில், 1979 ஆம் ஆண்டு 10 ஆயிரம்  லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அருகே இருந்த ஆழ்துளைக் கிணறு பழுதானதால், வேறு இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், ஆழ்துளைக் கிணறும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி அருகே பழுதடைந்து, பாது காப்பற்ற நிலையில் இருந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற  வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தர வின்படி, ஊராட்சி ஒன்றிய  ஆணையர் அறிவுரையின் படி பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. அதேபோல் ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளியின் அருகில் 20 ஆண்டுகளுக்கும் முன்பாக கூடுதல் வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு அவையும் பழுத டைந்து காணப்பட்டது. அந்த  பள்ளிக் கட்டிடமும் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொ டக்கப் பள்ளி அருகே பழுந்த டைந்த நிலையில் காணப் பட்ட மேல்நிலை நீர்த்தேக் கத்தொட்டியும், பழுதடைந்த  கூடுதல் வகுப்பறை கட்டிட மும் இடித்து அகற்றப்பட்ட தால், மாணவர்களின் பெற் றோர்கள் நிம்மதி அடைந்த னர்.