தஞ்சாவூர், அக்.30 - திருச்சி - அகமதாபாத் வாராந்திர புதிய ரயிலுக்கு தஞ்சா வூரில் ஞாயிறன்று ரயில் உபயோ கிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து மும்பைக்கு மெயின் லைன் வழியாக ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகள், ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மும்பை, தஞ்சாவூர் வழியாக அகமதாபாத்தி லிருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப் பட்டது. இதையடுத்து திருச்சியிலி ருந்து அகமதாபாத்துக்கு புறப்பட்ட புதிய சிறப்பு ரயில் ஞாயிறன்று தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக் குமார் ஆகியோர் தலைமையில் சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ரயில் ஓட்டுநர் சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப் பட்டார். மேலும், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் உமர்முக்தார், பைசல் அகமது, கண்ணன், பேராசிரியர்கள் திரு மேணி, செல்வகணேசன் மற்றும் காஜாமொய்தீன், கூத்தூர் ரங்க ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.