districts

பணி நிரந்தரம் செய்ய மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.26-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் பட்டுக் கோட்டை, பேராவூரணி தாலுகா வைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தலைமையில் நடை பெற்றது.  அரசு ஆணை 151-ல் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை, உலக மாற்றுத்திற னாளிகள் நாளான டிசம்பர் 3ஆம் தேதி  பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முதல்வர் அறிவித்த இலவச வீட்டு மனைப்பட்டா வழங் கும் திட்டத்தை உடனே அமல் படுத்த வேண்டும்.  ரயில் பயண அட்டை வழங்கும்  முகாமை அந்தந்த பகுதிகளி லேயே நடத்தி, நிரந்தர பயண அட்டை வழங்க வேண்டும். கூட்டத் தில் அனைத்துத் துறை அலுவ லர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மாற்றுத்திற னாளிகள் சங்க நிர்வாகிகள் பேசி னர்.  சில தினங்களுக்கு முன்பு நடை பெற்ற முகாமில் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு அளித்த மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.  இதில், அரசு அதிகாரிகள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்க  மாவட்ட துணைத் தலைவர் மேனகா  மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.