தஞ்சாவூர், டிச.23- தமிழக அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன், இலங்கை அபிநய கலாஷேத்ரா தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற் குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்ப் பல்கலை., துணைவேந்தர் வி.திரு வள்ளுவன், பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், இலங்கை அபிநய கலா ஷேத்ரா இயக்குநர் திவ்யாசுஜேன் ஆகி யோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரி மாறிக் கொண்டனர். நிகழ்வில், தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் க.திலகவதி, தமிழ்ப் பண்பாட்டு மைய இணை இயக்குநர் முனை வர் செ.கற்பகம், உதவிப்பதிவாளர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.