districts

அனுமதி இல்லாமல் இயங்கும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர், பிப்.28 - தஞ்சாவூர் மாவட்டத்தில் கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் 300 இறால் பண்ணைகள் பதிவு செய்யப்பட்டு  இறால் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர 92 இறால் பண்ணைகளை பதிவு செய்திட மாவட்ட அளவுக் குழுவினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  பதிவு செய்யப்பட்ட இறால் பண்ணை களில் 75 இறால் பண்ணைகளின் பதிவு உரிமம்  மட்டுமே தற்போது நடப்பில் உள்ளது. எஞ்சிய  இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணை யத்தில் புதுப்பித்திட வேண்டும். மேலும், எவ்வித பதிவு செய்யப்படா மலும் இறால் பண்ணைகள் இயக்கத்தில்  உள்ளதாக அறியவருகிறது. இவ்வாறு செயல்படும் இறால் பண்ணைகள் உடனடி யாக இறால் வளர்ப்பு பணிகளை நிறுத்தம்  செய்திட அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படாமல், உரிமம்  புதுப்பிக்காமல் இயங்கும் இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையச் சட்டம் 2005 பிரிவு 14-ன்படி மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும், கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் பிரிவு 15-ன்படி  நீதிமன்றத்தில் குற்றத்தை பதிவு செய்து நட வடிக்கை எடுத்திட உறுப்பினர் செயலரான மீன்துறை உதவி இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தினை கடு மையாக செயல்படுத்திட கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தினால் அறிவு றுத்தப்பட்டுள்ளது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் பதிவு  செய்யப்படாமல் இயங்கும் இறால் பண்ணை களை உடனடியாக பதிவு செய்திடவும், உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் இறால்  பண்ணைகளில் பதிவு உரிமத்தினை புதுப் பித்திடவும் இறால் பண்ணை உரிமையாளர் கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  தவறினால் மேற்படி சட்ட விதி களின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.