districts

நிலுவையிலுள்ள ஊதிய உயர்வை வழங்குக! மார்ச் 23 மின் ஊழியர் மத்தியமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மார்ச் 5 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சாவூர் கிளை நிர்வாகிகள் கூட்டம்  கிளைத் தலைவர் ஏ.அதி தூதர் மைக்கேல்ராஜ் தலை மையில் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் பணி புரியும் துப்பு ரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியு றுத்தி மார்ச் 7 (திங்கள் கிழமை) அன்று, சென்னை யில் மின்வாரிய தலைமை யகம் முன்பு நடைபெறும்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் தில் 2 வேன்களில் பெண்கள் சென்று கலந்து கொள்வது, ஒப்பந்த ஊழியர்களின் பணி  நிரந்தரம் வேண்டி, மார்ச் 16 அன்று சென்னை மின்வாரிய தலைமையகம் முன்பு நடை பெறும் முற்றுகைப் போராட் டத்தில் தஞ்சாவூர் கிளை யிலிருந்து நான்கு பேருந்து களில் ஒப்பந்த ஊழியர்கள் சென்று கலந்து கொள்வது. மார்ச் 28, 29 தேதி களில் ஒன்றிய அரசின் தொழி லாளர் விரோத கொள்கை களைக் கண்டித்து நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மின் ஊழியர்கள் முழுமையாக கலந்து கொள்வது. மார்ச் 8  சர்வதேச மகளிர் தினத்தன்று  கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து ஆர்ப்பாட் டம் நடத்துவது. நிலுவை யிலுள்ள ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 23 அன்று  தஞ்சாவூர் மத்திய அலுவலக  வாயிலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  கூட்டத்தில் கிளைச் செய லாளர் பி.காணிக்கைராஜ், பொருளாளர் எம்.ஆரோக்கி யசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜூ மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.