districts

பட்டுக்கோட்டை விஷம் அருந்திய எஸ்எஸ்ஐ மருத்துவமனையில் அனுமதி

தஞ்சாவூர், ஜன.30 - பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலை யத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வந்தவர் தங்கப்பா  (54). இவர் சனிக்கிழமை மாலை பணியில் இருக்கும் போது, நகர காவல் நிலையத்தில், தனது இருசக்கர வாகனத்தை எடுக்கும் போது மயங்கி கீழே விழுந்துள்ளார்.  உடனடியாக அங்குள்ள காவலர்கள் அவரை தூக்கி தண்ணீர் தெளித்து விசாரித் துள்ளனர். அப்போது, தான் விஷம் அருந்தி  இருப்பதாக கூறியுள்ளார். இதனை தொ டர்ந்து மற்ற காவலர்கள் அவரை மீட்டு, பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத் துச் சென்றனர். அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பட்டுக்கோட் டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் தஞ்சாவூர் தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வா ளர் ராஜேஷ் இச்சம்பவம் குறித்து விசாரணை  நடத்தி வருகிறார்.