தஞ்சாவூர், ஜூன் 5- தஞ்சை மாணவிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் மாவட்ட ஆட்சி யர், எம்.எல்.ஏக்.,கள் பாராட்டு தெரிவித்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை எல்ஐசி காலனி ஜெ.ஜெ நகரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் - ரேவதி தம்பதியின் ஒன்பது வயது மகள் இனியா. இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தொன்மை யான இலக்கிய நூல்க ளான அகநானூறு, புறநா னூறு, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி உள்ளிட்ட 60 பழந்தமிழ் இலக்கிய நூல்க ளின் பெயர்களை 40 நொடி களில் தடங்கலின்றி சொல்லி கலாம் உலக சாதனை புத்தகத் தில் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு விழா ஒன்றிற்கு தஞ்சை வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவி குறித்து அறிந்து மேடைக்கு வரவழைத்து பேசினார். அப்போது ஆயி ரக்கணக்கானோர் கூடி இருந்த அரங்கில், ஒலிவாங் கியை கையில் பிடித்த மாணவி இனியா, 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை சில நொடி களில் சொல்லி முடித்தார். இதையடுத்து மாண விக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும் தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் டி.கே.ஜி.நீல மேகம் (தஞ்சாவூர்), துரை. சந்திரசேகரன் (திருவை யாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), உள்ளிட் டோர் பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் மாணவிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு, நாடாளுமன்ற உறுப்பி னர் கவிஞர் தமிழச்சி தங்கப் பாண்டியன் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.