கும்பகோணம், பிப்.23 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத் தில் மக்களுக்கான போராட்டங்களில் பங்கெ டுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழருமான ஆர்.எஸ். என்ற சாமிநாத னின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன் செங்கொடி ஏற்றி அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி னார். செயற்குழு உறுப்பினர் ஜெயபால் அருளரசன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவ பாரதி, பக்கிரிசாமி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், நாச்சியார் கோவில் கிளை செயலாளர் பார்த்திபன் மற்றும் அவரது மனைவி அம்மனி, மகன்கள் இளங்கோ, மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.