தஞ்சாவூர், மார்ச் 29 - 2022 ஆம் ஆண்டின் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம், மீண்டும் வலியுறுத்த தேசிய வாக்கா ளர் விழிப்புணர்வு போட்டியினை, “எனது வாக்கு எனது எதிர்காலம்-எனது வாக்கின் வலிமை” என்ற கருப்பொருளின் மீது போட்டி நடத்த உள்ளது. இதில் வினாடி வினா போட்டி, எழுத்து வடிவில் முழக்கம் தயா ரித்தல், பாடல் போட்டி, வீடியோ தயாரித்தல் போட்டி மற்றும் போஸ்டர் வடி வமைப்பு போட்டி ஆகியவை 15.3.2022 வரை நடைபெற்று வந்த நிலையில், மேலும், அனைத்து தரப்பு வயதினரும் பெருமளவில் பங்கேற்கும் வகை யில் 31.3.2022 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் போட்டி களில் வெற்றி பெரும் நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் முதலாவ தாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக பாட்டு போட்டி க்கு ரூ.ஒரு லட்சம், வீடியோ தயாரித்தல் போட்டிக்கு ரூ.2 லட்சம் மற்றும் போஸ்டர் வடிவமைத்தல் போட்டிக்கு ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. எனவே, போட்டியில் பங்கேற்க உள்ள நபர்கள் https//ecisveep.nic.in/contest/ என்ற இணைய தளத்தில் உள்ள விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் தெரிந்து கொள்ளலாம். போட்டியாளர்கள் தயாரித்த விபரங்களை voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் 31.3.2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.