தஞ்சாவூர், ஜூன் 14 - மணல் குவாரியில் இருந்து வரும் கனரக வாக னங்களை கட்டுப்படுத்த கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திரு வையாறு அருகே சாத்த னூர், மருவூர், வடுகக்குடி ஆகிய பகுதியில், கொள்ளி டம் ஆற்றில், அரசுக்கு சொந்தமான மணல் குவாரி அமைந்துள்ளது. இந்த மணல் குவாரியில் கணக் கின்றி மணல் எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிப் பதாகவும், கனரக வாகனங் களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் பல்வேறு அரசியல் கட்சியினர், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை விடு முறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், அவ்வழி யாக செல்லும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கனரக வாகனங்களால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஆச்ச னூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்பு, மணல் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படு வதால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கனரக வாகன போக்குவரத்தை கட்டுப் படுத்த வேண்டும். மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருவை யாறு – திருக்காட்டுப்பள்ளி சாலையில் பள்ளி மாணவ, மாணவிகளும் கிராம பொது மக்களும் மறியலில் ஈடுபட்ட னர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.