districts

தஞ்சை மாவட்டம் முழுவதும் ஆக.25-31 மக்கள் சந்திப்பு இயக்கம்: சிபிஎம் முடிவு

தஞ்சாவூர், ஆக.21 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற் றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதா வது:  மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பின்பற்றி வரும் கார்ப்பரேட் ஆதரவு, மத வெறி இந்துத்துவா கொள்கை, அமலாக்கத் துறை நடவடிக்கைகளை எதிர்த்தும், மோடி அரசின் எட்டு ஆண்டுகால ஆட்சியின் விளை வாக, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை களை முன்னிறுத்தி, மத்திய - மாநிலக் குழு முடிவிற்கு ஏற்ப, தஞ்சை மாவட்டத்தில் ஆக.25 (வியாழக்கிழமை) தொடங்கி, ஆக.31 (புதன்கிழமை) வரை, ஒரு வாரம் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி கிளைகள், வர்க்க, வெகுஜன அமைப் பின் ஆதரவாளர்கள் குழுக்கள் அமைத்து, மாவட்டம் முழுவதும் வீடுகள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து, 300-க்கும் மேற்பட்ட குழுக்கள் இந்த பிரச்சாரத்தை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பொது மக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கவும், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் மக்க ளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமை கள் மற்றும் சிரமங்கள், குறிப்பாக வேலை யின்மை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் களின் விலைகள் உயர்வு, பொதுத்துறை தனியார் மயம், தொழிலாளர்களின் உரிமை  பறிப்பு, வேளாண் துறை பாதிப்புகள், ஜன நாயக உரிமை பறிப்பு, அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை தகர்ப்பது, புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை போன்ற அரசுத் துறைகளை பயன்படுத்தி மக்களை அச்சு றுத்துவது, சிறுபான்மையினர், பட்டியல் இன, பழங்குடியின மக்கள் மீதான தாக்கு தல்கள், வாழ்வாதார பறிப்பு, பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் உள் ளிட்ட அம்சங்களை முன்னெடுக்க உள்ளோம்.