தஞ்சாவூர், மார்ச்.24 - தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்வி நிறுவன வளாகத்தில் இந்திய அஞ்சல் துறையின் புதிய பிரான்சைஸ் அவுட்லெட் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன், தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் அஞ்சலக, முதுநிலைக் கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு, இந்திய அஞ்சல் துறையின் புதிய பிரான்சைஸ் அவுட்லெட்டை திறந்துவைத்தார். மற்றொரு சிறப்பு விருந்தினர் கணேஷ்குமார் அஞ்சலக சேமிப்புக் கணக்கு அட்டையை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கினார். மருதுபாண்டியர் கல்லூரி, முதல்வர் மா.விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ், கணினி அறிவியல் துறைத் தலைவர் எல்.அருணா ஆகி யோர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வீ.வெற்றிவேல் நிகழ்வை தொகுத்து வழங்கினார். முன்னதாக இயற்பியல் துறைத்தலைவர் சரவணன் வரவேற்றார். நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பிரின்ஸ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் செய்திருந்தார்.