districts

img

நீர் வெளியேறும் பகுதியில் தனிநபர்கள் வேலிபோட்டு அடைப்பு: குவளைவேலி கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் வழங்கிய சட்டவிரோத பட்டாவை ரத்து செய்க!

சிவகங்கை, அக்.23- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா குவளைவேலி கண்மாய் கலுங்குபகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் வழங்கப்பட்ட சட்டவிரோத பட்டாவை ரத்துசெய்ய வேண்டும். கண்மாய் உடையும் அபாயத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்ற வேண்டும் என்று வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து வலி யுறுத்தப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி,ஒன்றிய செய லாளர் ஆண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் வீரபாண்டி, மானாமதுரை ஒன்றியத் தலைவர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் ஆகி யோர் குவளைவேலி கிராம மக்களை சந்தித்த னர்.  இக்கிராமத்தைச் சேர்ந்த தமிழ்பாண்டி மற்றும் கிராம மக்கள்  குவளைவேலி கண்மாய் குறித்து கூறுகையில், கண்மாய் நிரம்பி இருக்கிறது. தண்ணீரை வெளியேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை.  இதற்கு காரணமாக இருப்பது, கலுங்கு பகுதியிலிருந்து தண்ணீர் வெளியேற முடியாத நிலையில் கலுங்கு அருகே தடுப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. வெளியேறக்கூடிய பகுதி அடைக்கப் பட்டுள்ளது. கண்மாய் நீர்பிடிப்பு பகுதிகளை தனி நபர்களுக்கு பட்டா கொடுத்ததால் கலுங்கு அருகே பெரிய அளவிற்கு வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ளது .இதனால் தண்ணீர் வெளி யேறுவதற்கு வாய்ப்பு இல்லாத ஒரு நிலை இருந்து வருகிறது. 800 ஏக்கர் பாசன வசதி பெறுகிற கண்மாய் ஆகும். ஆறு மடைகள் உள்ளன. இதில் இரண்டு மடைகளில் தண்ணீர்  வெளியேறாத நிலையில் பழுதாகி உள்ளது. கடந்த ஆண்டுகளில் இதே போன்ற நிலை ஏற்பட்டது அப்போதெல்லாம் இந்த கழுங்கு வழியாகத்தான் திறந்து விடப்பட்டு தண்ணீர் சென்று இருக்கிறது .அதனால் இக்கலுங்கு தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், வட்டாட்சியர் நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்று கிராம விவசாயிகள் வலியுறுத்தினர். குவளைவேலி கிராமத்திற்க்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்த்து கண்மாய் கலுங்கு பகுதியில் அடைக்கப்பட்டி ருந்ததை அகற்றி தண்ணீர் சென்றுகொண்டி ருக்கிறது.  இதனை பார்வையிட்ட மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் கூறுகையில், கண்மாய் கலுங்கு அருகே நீர் பிடிப்பு பகுதியில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்துசெய்து கலுங்கு பகுதியில் தண்ணீர் நிரந்தரமாக வெளியேற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.