districts

img

வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு: பட்டியலின மக்கள் புகார்

வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு: பட்டியலின மக்கள் புகார்

சேலம், ஏப்.22- கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து, இழிவாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியு றுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் புகா ரளித்தனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி, சின்னையா புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். அனைத்து சமூக மக்களும் வழிபாடு நடத்த கடந்த 9 ஆண்டுக ளுக்கு முன்பு அப்பகுதியில் ஸ்ரீராஜ மாரியம் மன் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட அனுமதி மறுத்து, தொடர்ந்து ஆதிக்க சமூகத்தினர் பிரச்சனை செய்வது தொடர்கதையாக உள்ளது. இத னால், மனமுடைந்த பட்டியலின மக்கள் செவ் வாயன்று சேலம் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், நாங்கள் மேளம் அடிக் கும் தொழில் செய்து வருகிறோம். இதனால் எங்கள் பகுதியிலுள்ள மாரியம்மன் கோவி லில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்படு கிறது. குறிப்பாக, இதேபகுதியைச் சேர்ந்த  தனபால், மோகன், சரவணன், பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்து சாதி ரீதியாக ஆபாச வார்த்தைகளில் பேசி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட கோவிலில் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். மேலும், சாதி ரீதி யாக இழிவாக பேசும் நபர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத் தப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்களை அடை யாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் திங்களன்று ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.