districts

img

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்

அறந்தாங்கி, டிச.6-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டிணம் மீனவர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர் களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் (பொறுப்பு) பாரூக் முன்னிலை வகித்தார். பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் பயிலும்  மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றன. மாணவர்களை ஊக்கு விக்கும் விதமாக சான்றிதழ்கள் பதக்கங்கள்  மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.