tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்க 10 ஆம் ஆண்டு நிறைவு விழா - விளையாட்டு போட்டிகள்

திருச்சிராப்பள்ளி, பிப்.9- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் ஞாயிறன்று திருச்சி நவலூர் குட்டப்பட்டு அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜீவா, மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கோபிநாத், மணிகண்டம் ஒன்றியத் தலைவர் குமார், மாநில துணைச் செயலாளர் புஷ்பநாதன், புறநகர் மாவட்டத் தலைவர் குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சங்கர், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் தனலெட்சுமி ராமு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கிளை செயலாளர் கோகிலா நன்றி கூறினார்.