districts

img

அறந்தாங்கியில் சாரணர், சாரணியர் அமைதி பேரணி

அறந்தாங்கி, பிப்.24- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் சாரணர் இயக்க நிறுவனர் பேடன் பவுல் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி கல்வி மாவட்ட சாரணர் இயக்க மாணவ, மாணவிகளால் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது.  பேரணியை அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் முனைவர் இராஜாராமன், சாரண ஆணையர் தாமரைச்செல்வன், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தெய்வக்கனி, கீரமங்கலம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாரி முத்து, பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத் தலைவர் கராத்தே கண்ணையன், பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, ஆகியோர் துவக்கிவைத்தனர்.  அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய பேரணி பேருந்து நிலையத்தை சுற்றி மீண்டும் பள்ளி யை வந்தடைந்தது. பின்னர் சாரண இயக்க மாணவர்களுக்கான போட்டிகள் நடை பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு மாவட்ட சாரணர் இயக்க ஆணை யர் தாமரைச்செல்வன் சான்றிதழ் வழங்கி னார்.