districts

img

சாலையை செப்பனிடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அறந்தாங்கி, மார்ச் 29-  புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோவிலி ருந்து குண்டும் குழியுமாக இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்திருக்கும் குளத்து குடியிருப்பு, பெருநாவலூர் வழியாக செல்லும் சாலை யை செப்பனிடக் கோரி கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சி.சுப்பிரமணியன் தலைமையில் குளத்து குடி யிருப்பு க.செல்லராஜ், பெரு நாவலூர் கார்த்திகேயன், தணியனேந்தல் பாண்டி, மீனாங்குடியிருப்பு அன்பு, அண்ணாநகர் மணிமுத்து ஆகியோர் முன்னிலையில் மறியல் நடைபெற்றது.  சம்பவ இடத்திற்கு வந்த  நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் செந்தில் குமார், உதவி பொறியாளர் வீரமுத்து ஆகியோர் மறி யலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சாலையை சீர மைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கை விடப்பட்டது.