புதுக்கோட்டை, செப்.8 - புதுக்கோட்டையை அடுத்த கூறுப்பட்டி யில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த மின்மாற்றி சரிசெய்யப்படா ததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூறுப்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கூறுப்பட்டியில் உள்ள ஒரு பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்கும் மின்மாற்றி ஆயில் பற்றாக்குறை யால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீப்பற்றி எரிந்து பழுதாகி உள்ளது. இந்நிலையில் மின்மாற்றி பழுதை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். மின்மாற்றி பழுதை நீக்க 40 நாட்களா கும் என்றும், அதற்கு ஆகும் 68 ஆயிரம் ரூபாய் செலவை பொதுமக்களே ஏற்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் மின்மாற்றி பழுதால் கடந்த மூன்று தினங்களாக மின்சார மின்றி தவித்து வருகின்றனர். விவசாயத்திற் கும் குடிப்பதற்கும் நீர் இல்லாமல் அவதி அடைகின்றனர். மின்மாற்றி பழுதை நீக்க சொன்னால் காலதாமதமாகும் என்று சொல்வதோடு அதற்குண்டான செலவு முழு வதையும் பொதுமக்களே ஏற்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ள தாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் பகுதியில் பழுதாகி உள்ள மின்மாற்றியை மின்வாரியமே சரி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன், புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையில் கூறுப்பட்டி பகுதியில் பழு தடைந்த மின்மாற்றியின் பாகத்தை சாலை யில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு சமரச பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கொடுத்த வாக்குறுதியை ஏற்று, போராட்டத்தை ஒத்திவைத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.