புதுக்கோட்டை, மே 20 - திட்டமிட்டு தூண்டப்படும் மதக்கல வரங்களை மக்கள் ஒற்றுமையால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என்றார் கவிஞர் நா.முத்துநிலவன். மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் “அவரவர் விழா அவரவர்க்கு. இதிலே என்ன பிணக்கு” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் நா.முத்துநிலவன் பேசுகை யில், “மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராம நவமித் திருவிழா ஊர்வலத்தில் கல்வீசித் தாக்கியதாக 16 இஸ்லாமி யர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களின் வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பே விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த வசீம் ஷேக் என்பவர் கல்வீச்சில் ஈடுபட்ட தாக பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டது. சிறையில் இருக்கும் மூவர் மீது இது போன்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவத்தால் நாடே அதிர்ச்சிக்கு உள்ளா னது. பாஜக ஆளும் சட்டமன்றங்களி லும், நாடாளுமன்றத்திலும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பேச்சு மக்களிடையே வெறுப்பைத் தூண்டுவதாக உள்ளது. மொழியும் மதமும் பண்பாட்டின் அடையாளங்கள். ஒவ்வொரு மாநில மும் அதற்குரிய மொழி, உணவு, உடை பண்பாடுகளோடு வாழ்வதில்தான் இந்திய ஒன்றியத்தின் அழகும் பெரு மையும் உள்ளது. ஒரே மொழி, ஒரே வரி, ஒரே குடும்ப அட்டை, ஒரே தேர்தல் எனும் முழக்கங்கள் பன்முகப் பண்பாட் டுக்கு அச்சம் தருவதாகவே இருக்க முடியும். இந்துராஸ்ட்ரம் என்பதே, இந்தி யைத் திணிப்பதன் நோக்கம்தான். மக்கள் ஒற்றுமையைக் கட்டுவதன் மூலம் தான் மக்கள் விரோத சக்திகள் வளராமல் தடுக்க முடியும்” என்றார். நிகழ்ச்சிக்கு மேனாள் திமுக நகரச் செயலாளர் க.நயினாமுகமது தலைமை வகித்தார். தீர்மானங்களை தமுஎகச நகரக் கிளைத் தலைவர் கி.ஜெயபாலன், எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் முன்மொ ழிந்தனர். மக்கள் ஒன்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.அசோ கன் ஒருங்கிணைக்க, அ.மணவாளன் நன்றி கூறினார்.