districts

img

தொடரும் சாதிய வன்கொடுமைகள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்

கள்ளக்குறிச்சி. பிப்.25- புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சம்பவத்தில் குற்ற வாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும், தொட ரும் சாதிய வன்கொடுமைக ளுக்கு கண்டனம் தெரி வித்தும் தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணி சார்பில் கள்ளக் குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாட்டில் தொடரும் சாதிய வன்கொடுமைதாக்கு தல்களை மாநில அரசு தடுத்து நிறுத்தவேண்டும், மேலவளவு படுகொலை குற்றவாளிகளுக்கு சாதக மான உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில்துறைபட்டு அம்பேத்கர் நகர் தலித் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறை வெறியாட்டம் நடத்தி சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சிறுவாங்கூர் காந்தி நகர், தலித் இளைஞர்கள் மீது காவல்துறையினர் பதிந்துள்ள பொய் வழக்கு களை திரும்ப்ப பெற வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்குறுதி அளித்தபடி சங்கராபுரம் வட்டம், அத்தியூர் கிராம தலித் மக்களுக்கு பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், ஊராங்கனி கிராமத்தில் பாதிப்புக்குள்ளான முடி திருத்தும் தொழிலாளர் இளவரசன் குடும்பத்திற்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், வட பொன்பரப்பி கிராம அருந்ததிய மக்களின் நிலத்தை ஆதிக்க சாதி யினரிடமிருந்து மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னணியின் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி.ராஜா தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் மு.சாமு வேல்ராஜ் பங்கேற்று உரையாற்றினார். மாநில துணைத் தலை வர் ஜி. ஆனந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி. ஏழுமலை, மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பி. சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர், ஏ.வி. ஸ்டாலின்மணி, வாலி பர் சங்க மாவட்ட செய லாளர் எம்.கே. பழனி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சின்னராசு உள்ளிட்ட பலர் கோரிக்கை களை வலியுறுத் பேசினர்.