பெரம்பலூர், செப்.25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு கூட்டம் சனிக் கிழமை துறைமங்கலத்திலுள்ள கட்சி அலு வலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் அ.கலையரசி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் அறிக்கையை முன் மொழிந்தார். மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து சிறப்புரையாற்றி னார். பின்னர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மக்காச் சோளம் பயிரிட்டுள்ளனர். மக்காச்சோள பயிர்கள் அமெரிக்கன் படைப்புழுக்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடன் வாங்கி பயிரிட்டுள்ள விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பெரம்பலூரில் அன்றாடம் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. பொது மக்களின் அச்சத்தை போக்கி டும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் நகராட்சி பணியாளர்கள் கையுறை, முகக் கவசம் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றுகின்றனர். மேலும் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையான சம்பளம் மற்றும் இபிஎப் தொகை பிரச்சனை நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.