பெரம்பலூர், மார்ச் 4 - தமிழ்நாடு அரசு சார்பில் மக்களின் பயன்பாட்டிற்காக அனைத்து மாவட்டத்திற்கும் மொத்தம் 188 புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை வாக னங்கள் வழங்கப்பட்டன. அதனடிப்படையில் பெரம்ப லூர் மாவட்டத்திற்கு 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனமும், 3 பழைய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாற்றாகவும் வழங்கப்பட்டன. லப்பைக்குடிக்காடு, செட்டிகுளம் மற்றும் பாடா லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத் தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 3 வாகனங்களை தலா சுமார் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தும் கைகளத்தூர் மற்றும் வேப்பூர் ஆகிய ஊர்களுக்கு புதிதாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் வழங்கப்பட் டுள்ளன. இந்த 5 வாகனங்க ளின் மதிப்பு சுமார் ரூ.1,10, 00,000. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 14 எண்ணிக்கையிலான 108 வாகனங்கள் இயங்கி வருகின்றன. 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கைகளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நிறுத்தப் பட்டு சேவை வழங்கப்படு கிறது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிர பாகரன் 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்களை துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி தலைவர் குன்னம் சி.ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மீனா அண்ணாதுரை (பெரம் பலூர்), பிரபா செல்லப் பிள்ளை (வேப்பூர்), அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.அர்ச்சுணன், தேசிய சுகாதா ரத்துறை மாவட்ட திட்ட மேலாளர் மரு.அன்பரசு, 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட திட்ட மேலாளர் அறிவுகரசு, மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.