districts

img

பழனி தேவஸ்தானத்தில் இடஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கோரி மனு

பழனி, மார்ச் 4- பழனி தேவஸ்தானத்தில் மாற்றுத்  திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு  அடிப்படையில் வேலை வழங்கக்கோரி  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில்  தேவஸ்தான மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழனி யாண்டவர் திருக்கோவில் நிர்வா கத்தின் சார்பில் பல்வேறு பணியி டங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய  அறிவிப்பை கடந்த 01.03.23 அன்று  வெளியிட்டனர். இந்த அறிவிப்பில் எந்த ஒரு இடத்திலும் மாற்றுத்திற னாளிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை.  எனவே, தேவஸ்தான நிர்வாகத்தின் சார் பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பை  திரும்பப்பெற்று மாற்றுத்திறனாளி களையும் உள்ளடக்கிய வேலை வாய்ப்பை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் பழனி நகரத் தலைவர் காளீஸ்வரி தலைமையில் பழனி தேவஸ்தான மேலாளரிடம் மனு அளிக்  கப்பட்டது. மனுவினை பெற்றுக் கொண்ட மேலாளர் .உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். மனு அளிக்கும் நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் ,பழனி  நகரச்செயலாளர் தங்கவேல், பொரு ளாளர் அய்யனார், பழனி ஒன்றிய தலை வர் மணிகண்டன், செயலாளர் கண் ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.