நாகப்பட்டினம், மார்ச் 20- நாகப்பட்டினம் நக ராட்சிக்கு உட்பட்ட நாகூர் பேருந்து நிலைய வளாகப் பகுதியில் நகராட்சி மற்றும் பொதுமக்களால் குப்பை கள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. நாகூர் நகரத்தின் மைய பகுதியில் நாகூர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் தொடர்ச்சி யாக குப்பைகளை கொட்டி ஒரு குப்பை கிடங்காக மாற்றி விட்டனர். நகரின் பல பகுதியில் எடுக்கப்படுகின்ற குப்பை கள் இங்கு கொட்டப்படுகின் றன. இதனால், மாப்பிள்ளை தெரு, பெரியார் தெரு ஆகிய பகுதிகளுக்கு செல்ல மிக வும் சிரமமாக உள்ளது. மேலும் குப்பைமேடு அருகிலேயே நர்சரி பள்ளி ஒன்ற உள்ளது. இதனால், பள்ளி குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுவ தாக பெற்றோர்கள் கூறு கின்றனர். குப்பை கிடங்கை சுற்றி லும் பல நூறு குடும்பங்கள் வசித்து வருவதால், குப்பை களிலிருந்துவரும் துர்நாற்ற மும், கொசுக்களும் உற்பத்தி யாகி குடியிருப்பு மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கு கின்றன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நகரச் செயலாளர் க.வெங்க டேசன் கூறுகையில், ‘‘சமய நல்லிணக்க பூமியாக திக ழும் நாகப்பட்டினம் மாவட் டத்தின் முக்கிய இடமான நாகூர் பகுதியில் அதுவும் முதன்மையான பேருந்து நிலையத்தின் அருகிலேயே நகராட்சியின் குப்பைகள் கொட்டப்படுவது கண்டனத் திற்கு உரியது. நாகப்பட்டினம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த குப்பைகளை அகற்றி, அப்பகுதியில் இனிவரும் காலங்களில் குப்பைகளை சேமிக்காத வண்ணம் ஒரு தூய்மையான பகுதியாக மாற்ற வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.