districts

img

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பல்வேறு நாடுகளில் இருந்து 260 வகை பறவைகள் லட்சக்கணக்கில் வருவதுண்டு.  பூநாரை, வண்ண நாரை, கூழைக்கிடா ,சிறவி, கடல் காகம் உள்ளிட்ட பறவைகள் ஏராளமாக வந்துள்ளன. 

பறவைகளின் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் வனத்துறையினர் திருச்சி மண்டல வனப்பாதுகாவலர் சதீஸ் அவர்கள் தலைமையில் 75க்கும் மேற்பட்டோர் 14 வழித்தடங்களில் சென்று பறவைகளை கணக்கிட்டனர்.

மொத்த பறவைகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பிற்கு பின் தெரிவிக்கப்படும் என்று திருச்சி மண்டல வன பாதுகாவலர் தெரிவித்தார்.