மயிலாடுதுறை, டிச.21 - மயிலாடுதுறை மாவட்டத்தில் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை எதிர்கொள்வது தொடர்பாக செம்பனார்கோ விலில் புவிகாப்பு அறக்கட்டளை சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் பல லட்சம் பனை விதைகள் நடுதல்-பராமரித்தல் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு புவி காப்பு அறக்கட்டளை நிர்வாகி இரணியன் தலைமை வகித்தார். நிதி அறங்காவலர் சிலம்பரசன் வரவேற் றார். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என அறிவியல் ஆய்வா ளர்கள் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ள னர்.
கடந்த 60 ஆண்டுகளாக ஆழ்குழாய் பம்பு செட் மூலம் பூமியில் இருந்து நீரை உறிஞ்சி விவசாயம் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், இப்பகுதியில் ஒன்றிய அரசின் ஓஎன்ஜிசி மூலம் பூமியில் ராட்சத குழாய் அமைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்து வதால் அதிக நீர் பூமியிலிருந்து வெளி யேற்றப்படுகிறது. அத்துடன் இறால் பண்ணைகள் மற்றும் மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால் பூமியில் வெற்றிடம் ஏற்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் கடல் மட்டத்திற்கு கீழே புதைந்து வரும் அபாய சூழல் உள்ளது.
இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக மரக்கன்றுகளையும், கடலோரப் பகுதிகளில் பனை விதைகள் மூலம் பசுமை அரண்களை அமைக்கவும் உடனடி தேவை ஏற்பட்டுள்ளது. செம்பனார்கோவிலில் பல ஊராட்சி களில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 1 லட்சம் பனை விதைகள் மக்களிடம் வழங்கி யும், நடவும் செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பராமரிப்பது, மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025 ஜனவரி முதல் மக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, முதல் கட்டமாக சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை நடுவது. கடலோரப் பகுதிகளை பாதுகாக்க வேண்டி பல லட்சம் பனை விதைகளை நடவு செய்து பராமரிப்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் ஆலோசகர் சுந்தர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.