மதுரை, பிப்.21- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெ ழுத்து பெறும் இயக்கம் மதுரை தெற்கு வாசல் மார்க்கெட் அருகில் மாவட்ட தலைவர் அ. பாவேல் சிந் தன் தலைமையில் திங்க ளன்று நடைபெற்றது. தெற்கு வாசல் பகுதிக்குழு செயலா ளர் அ. போனிஃபேஸ் வர வேற்றார். மாவட்ட நிர்வாகி கள் ந. நிருபனா, எஸ். வேல் தேவா, மா. ஆறுமுகம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். இதில் மக்கள் நல செயல்பாட்டளர், ரசிகர் மன் றத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அரசு மருத்துவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக் கத்தை மதுரை மாநகர் காவல் துறை ஆணையாளர் கே. எஸ். நரேந்திரன் நாயர் துவக்கி வைத்தார், அரசு கூடுதல் தலைமை வழக்கறி ஞர் வீர கதிரவன், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஏ.ரத்தினவேல், பல்சமய உரையாடல் குழு செய லர் பெனடிக்ட் பர்ணபாஸ், அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் என். முத்து அமு தநாதன், திருநங்கை ஆவண மையம் எழுத்தாளர் ப்ரியா பாபு, 2023 ஜல்லிக்கட்டு போட்டி வெற்றியாளர் கே. தமிழரசு மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்க தலை வர் விஜய் அன்பன் கல் லாணை, அஜித் ரசிகர் மன்ற தலைவர் ஊர்காவல் கௌவு தம், மதுரை மாநகர் சூர்யா தலைமை நற்பணி மன்ற தலைவர் கே. எம். ஜோதி முத்து, விஜய் சேதுபதியா ரின் அன்பு தம்பிகள் நற்பணி இயக்க தலைவர் விக்னேஸ் வரன, சிம்பு தலைமை ரசி கர் மன்ற தலைவர் சிம்பு சுரால், பருத்திவீரன் கார்த் திக் ரசிகர் மன்ற துணைத் தலைவர் பி. ஜி. பிரபு ஆகி யோர் இயக்கத்திற்கு ஆத ரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி. செல்வா ,இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் க. பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் தெற்கு வாசல் பகுதி குழு உறுப்பினர் சு. பாலமுருகன் நன்றி கூறினார்.