மதுரை, ஜூன் 16- ரயில்வே துறைக்கு புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் 100 புதிய தொழில்நுட்பங்கள் தேவை என்றும் மதுரை கோட்ட ரயில்வே மேலா ளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வியா ழனன்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப் பது, ரயில் பாதை தாங்கு திறனை கண்கா ணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத் தில் விபத்தில்லாமல் அதிக ரயில்களை இயக்குவது, துல்லியமாக ரயில் பாதை யை ஆய்வு செய்வதற்கு தொழில்நுட் பம், அதிக எடையைத் தாங்கும் சரக்கு ரயில் பெட்டிகளுக்கு நெகிழ்வு அடுக்கு, ரயில் மின் பாதைகளை கண்காணிப்பது, எடை குறைவான ரயில் சரக்கு பெட்டி கள் தயாரிப்பது, ரயில் பாதை சரளைக் கற்களை சுத்தப்படுத்தும் இயந்திரம், ஊழியர்களுக்கான முன் பயிற்சி மற்றும் தன்னிலை அலுவல் கால பயிற்சி, ரயில் பாலங்களை ஆய்வு செய்ய தற்கால புதிய தொழில்நுட்பம், பயணிகள் சேவை யை மேம்படுத்த மின்னணு தரவுகளை பகுப்பாயும் தொழில்நுட்பம் போன்ற ரயில்வே துறைக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை உருவாக்க புதிய ஸ்டார்ட் அப் கம்பெனி களுக்கு வாய்ப்பு தரப்பட இருக்கிறது. இதுபோன்ற 100 தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இதற்கான விரி வான தகவல்களை www.innovation. indianrailways.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் . மதுரை - தேனி பகுதியில் போடிநாயக்கனூர் வரை ரயில் பாதை பணிகள் முடிவ டைந்த பிறகு புதிய ரயில்கள் இயக்கு வது பற்றி முடிவு செய்யப்படும். பல் வேறு ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது . பயணிகளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரயில் இடை நிறுத்தங்கள் வழங்குவது கூடாது என் பது ஒரு கொள்கை முடிவாக உள்ளது.
ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணி
பல்வேறு ரயில் நிலையங்களில் நடை மேடைகளை உயர்த்துவது, நீட்டிப் பது, மேற்கூரை அமைப்பது, மின்சார சேமிப்பிற்கான எல்இடி விளக்குகள் அமைப்பது போன்ற பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளை யம் ரயில் நிலையங்களில் அளவுக்கு அதிகமான ரயில்கள் கையாளப்படு கிறது. இந்த ரயில் நிலையங்களை விரி வாக்கம் செய்வதற்கு போதிய இடவசதி யும் இல்லை. இதனால் மதுரை - கோயம் புத்தூர் பிரிவில் கூடுதல் ரயில்கள் இயக்கு வது சாத்தியமில்லாமல் இருக்கிறது. கடந்த மே மாதம் 25 அன்று ரூ. 358.63 கோடி மதிப்பில் மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு வேலைக்கான ஒப் பந்தப்புள்ளிகள் வரவேற்கப்பட் டுள்ளன. ஒப்பந்ததாரர்களுடன் ஜூன் 17 சென்னையில் நேர்காணல் நடைபெற இருக்கிறது. ஜூலை 25 தேதியன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. அதன்பின்பு மறு சீர மைப்பு பணிகள் துவங்கும் . மதுரை - தேனி புதிய ரயில் பாதை பகுதியில் சில இடங்களில் ரயில் சுரங்கப்பாதை அமைப்பது, பராம ரிப்பது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்தி வரு கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பில் முதுநிலை கோட்ட பொறியாளர் நாராயணன், முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், உதவி வர்த்தக மேலாளர் பிர மோத் குமார் ஆகியோர் உடனிருந்த னர்.