மாநில அளவில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் முதலிடம் பிடித்த வாலிபர் சங்க சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை மாநகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பழங்காநத்தம் பகுதியில் பகுதியில் நடத்தப்படும் சிலம்ப பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 9ஆம் வகுப்பு மாணவன் லோகேஷ் கடந்த வாரம் காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப் பயிற்சி போட்டியில் 45 கிலோ எடைப் பிரிவில் சீனியர் மற்றும் சப் சீனியர் களுக்கான போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் முதல் பரிசு பெற்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
அவரை பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன் மேற்கு ஒன்றாம் பகுதி குழு செயலாளர் கு. கணேசன் மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா பகுதிக்குழு உறுப்பினர்கள் பி. வீரமணி, கருத்த கண்ணன், பாண்டி முத்துக்குமார், மார்நாடு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதிக்குழு செயலாளர் கா. கௌதம் பாரதி, நிர்வாகிகள் பிரிதிவிராஜ், ஜீவா தமிழ், செல்வம் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள் உடன் லோகேஷன் பெற்றோர் நதியா, பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.