districts

img

மாதர் சங்க பகுதிக்குழு மாநாடு

மதுரை, ஜூன் 20-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை  மாநகர் மத்திய பகுதிக்குழு மாநாடு கே. விஜயா தலைமை யில் தலைமையில் நடைபெற்றது மூத்த தோழர் ஆர். வீரம்மாள் சங்க கொடியினை ஏற்றிவைத்தார். ஆர். வெண்மணி செல்வி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். என்.  கல்பனா வரவேற்றுப் பேசினார், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.ப்ரீதி துவக்கி வைத்துப் பேசினார். என். நிரு பனா வேலையறிக்கை சமர்ப்பித்தார். ஆர். ஜீவகலா, சிஐ டியு உதயநாதன், வாலிபர் சங்க நிர்வாகி விக்னேஷ் ஆகி யோர் வாழ்த்திப்பேசினர். மாவட்ட பொருளாளர் ஆர்.லதா  நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார், மாவட்ட செய லாளர் ஆர். சசிகலா நிறைவுரையாற்றினார். என். கலா நன்றி கூறினார்.  தலைவராக கே.விஜயா, செயலாளராக என்.கல்பனா, பொருளாளராக ஆர். என். சையதம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மாநகராட்சி நிர்வாகம் காமட்சிபுரம் அக்ரஹாரம், துவரைக்களம், வெள்ளி யம்பலம் வீதி ஆகிய பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும். மதுரை நகர் முழுவதும் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்து சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும்.நியாய விலைக் கடை களில் அனைத்துப்பொருட்களும் முறையாக வழங்க  வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.