எஸ்.ராமகிருஷ்ணன்
“உலகம் பற்றிய கனவு” என்பது என்னு டைய தலைப்பு. உலகம் எனக்கு எப்படி அறிமுகமானது என்றால் என்னுடைய வீடு தான் எனக்கு அறிமுகமான முதல் உலகம். அதனைத் தாண்டி எனது ஊர், எனது ஊருக்கு அருகில் உள்ள ஊர், பின் தேசம், இதுதான் உலகம். கல்வியும் அறிவும் வளர வளர அதுவே எனக்குள் உலகத்தைப் பற்றி கற்றுக் கொடுத்தது. அப்படிதான். தமிழில் எழுதிய கவிஞர்கள் அத்தனை பேருமே உலகைப் பற்றித்தான் சிந்தித்தார்கள். அந்த வகையில் தமிழில் பிரசித்தி பெற்ற “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பாடலை எழுதியவர் கணியன் பூங்குன்றனார். அப்படிப்பட்ட பரி பாடலை பாடிய அவர் எத்தனை தேசத்தை கண்டி ருப்பார். அவர் அதிகபட்சம் மதுரை, அதனை சுற்றியுள்ள ஊர்களை பார்த்திருப்பார். அவர் வாழ்ந்தது ஒரு இடமாக இருந்தாலும் அவருடைய மனது இந்த உலகைப் பற்றியே சிந்தித்தது. நீங்கள் எந்த நாட்டில் போய் இதை பாடினாலும் கேட்பார்கள். எங்களை பற்றி சிந்திக்கக் கூடியவர் யார் என்று கேட்பார்கள். அப்படி தமிழர்கள் கம்பர் எழுதினாலும் சரி, பெரிய புராணத்தை நாம் பார்த்தாலும் சரி அதில் முதலில் உலகம் என்று தான் துவங்கும். என் வீடு என்னுடையது என்று சிந்திக்காமல் உலகைப் பற்றி சிந்தித்தவர்கள் தான் தமிழ கத்தில் உள்ள கவிஞர்களும் கலைஞர்களும். இந்த உலகம் உயிர்ப்பிக்க வேண்டும். மேன்மை அடைய வேண்டும். கல்வியாலும் பண்பாட்டா லும் இந்த உலகம் மிகச்சிறந்த விசயங்கள் நடக்க வேண்டும் என்று தங்களுடைய படைப்பு களாலும் கனவுகளாலும் செய்து காட்டி னார்கள். என்னுடைய பள்ளி பருவத்தில் ‘மாரல்’ என்கின்ற வகுப்பு ஒன்று இருக்கும். அதில் நீதிபோதனை கற்பிப்பார்கள்.
அப்போது என்னுடைய ஆசிரியர் தைகளை கற்பிப்பதை விட நூல்களை எங்களை படிக்க சொல்வார் 45 நிமிடம் அந்த வகுப்பு நடக்கும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஒரு புத்தகத்தை படிப்போம். படித்து முடித்த பின் ஆசிரியர் கூறுவார். அந்த புத்தகம் பற்றி ஒரு பக்கத்திற்கு எழுதி கொடுக்க சொல்வார். நான் படித்த புத்தகம் ஏதென்ஸ் நகரை பற்றியது. அந்த நகரம் வரலாற்றில் ஏன் இத்தனை பெரிதாக கொண்டாடப்படுகிறது. அந்த நகரத்திற்கு ஏன் இத்தனை சிறப்புகள். அரிஸ்டாட்டில் போன்ற பல்வேறு அறிஞர்கள் அங்கு பிறந்தார்கள். அந்த நகரைப்பற்றி நான் படிக்கும் போது என்னுடைய ஊருக்கு பேருந்து வசதிகூட கிடையாது! ஒரு அரசு பள்ளியில் படிக்கும் சின்னஞ்சிறு மாணவனாக இருந்தேன், அன்றைக்கு நான் அந்த புத்தகத்தை படிக்கப்படிக்க அதில் அங்குள்ள சிந்தனை யாளர்கள் ஏதேன்ஸ் நகரில் பல்வேறு கல்வி நிலையங்களை உருவாக்கியுள்ளார்கள். அதன் மூலம் பல சிந்தனையாளர்களை உருவாக்கி யுள்ளார்கள், மூவாயிரம் ஆண்டுகளாக அறிவினுடைய தலை நகரமாக ஏதேன்ஸ் நகரம் விளங்கியுள்ளது என அந்த சின்னஞ்சிறு நூலில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். அந்த மாபெரும் தேசத்தை தெரிந்து கொள்ள எனக்கு கை கொடுத்தது ஒரு சின்னஞ்சிறு புத்தகம் தானே. நான் அந்த நகரத்தை நேரில் பார்த்ததில்லை. ஆனால் ஒரு சின்னஞ்சிறு புத்தகம் வழியாக அந்த நகரம் என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த நகரத்தில் இருந்த சாக்ரடீஸ், மெகஸ்தனிஸ், பிளேட்டோ போன்ற சிந்தனையாளர்கள் அறிவை மேம்படுத்த ஒன்று கூடி விவாதிக்கின்றார்கள். அரசு, மடாதிபதி போன்றோருக்கு ஆலோசனை வழங்கு கிறார்கள். பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அங்குள்ள கவிஞர்களும், எழுத்தாளர்களும் பாதுகாத்து உள்ளார்கள்.
இது காலம் காலமாக அங்கு நடந்து வருகிறது. எனவே தான் அந்த நகரத்தை நான் வியப்போடு பார்க்கிறேன். அந்த வகையில் நான் ஒரு அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் ஏதேன்ஸ் நகரை போல் எனக்கு அருகில் இருந்தது மதுரை. நான் பெருமையோடு சொல்லிக் கொள்வேன். இந்த நகரம் தான் தமிழ்ச்சங்கம் வளர்த்தது. தமிழ் இனத்திற்கு, தமிழ் மொழியை வளர்த்தெடுத்ததில் மதுரை நகரத்திற்கு பெரும் பங்குள்ளது, ஏதேன்ஸ் நகரம் ஒரு சிந்தனையாளர்களின் நகரமாக இருந்தாலும் இந்த மதுரை நகரம் கலைஞர்களின் நகர மாகும். இந்த நகரம் ஏராளமான சிந்தனையை யும், தமிழ் மரபுகளையும் கற்றுத்தரக்கூடிய நகரம். இந்த மதுரையில் பெரிதும் சிறப்பாக கருதுவது கடவுளே தன்னை கவிஞராக அங்கீ காரம் கேட்டது. இது உலகில் எந்த நகரத்திலும் நடக்காத ஒன்று. ஒரு கடவுளே வந்து தன்னை கவிஞனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியும் உன்னுடைய பாட்டில் பிழை உள்ளது என்று சொன்னது மதுரை மண்தான். எப்படிப்பட்ட பண்பாட்டை கொண்டுள்ளது. உலகில் எந்த ஒரு புரட்சியாக இருக்கலாம். அதனைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அன்றைக்கு தொலைக்காட்சி கிடையாது. நாளிதழ்கள் தான். இன்றைக்கும் அவற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நூலகங்களுக்கு சென்று அவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.
பல்வேறு அறிஞர்களையும் படைப்பாளி களையும் நாம் படிக்கும் போது நாம் தேசம் விட்டு தேசம் செல்லக்கூடிய அளவிற்கு உள்ளது தான் புத்தகங்கள். அப்படி புதிய புதிய அனுபவங்களையும் புதிய உலகத்தை யும் அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பது புத்தகங்கள் தான். வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்ற வர்கள் உலகம் முழுவதும் பயணித்தார்கள். ஆனால் பயணத்தின் முடிவே இல்லாமல் பயணித்துக் கொண்டிருப்பது கதை மட்டும் தான். ஒரு கதை எங்கே பிறந்தது என்று யாருக்குமே தெரியாது. நாம் சிறுவயதில் கேட்ட காக்கை, முதலை, குரங்கு போன்ற கதைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் சொல்லப்பட்ட ஈஷாப் கதைகள். அவை காலம் காலமாக மாறி நம்மை வந்தடைந்துள்ளது. அந்த வகையில் நாம் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது முதலையும் குரங்கும் என்ற ஒரு ஆங்கில கதை படித்திருப்போம். அதில் குரங்கின் உடைய இதயத்தை சாப்பிட வேண்டும் என்று முதலை கூறும். அப்போது குரங்கு என்னுடைய இதயத்தை நான் மரத்தின் காயவைத்து வந்து விட்டேன் வேண்டுமென்றால் நான் மீண்டும் சென்று எடுத்து வருகிறேன் என்று சொல்லி தப்பிச்செல்லும். இந்த கதை கிரேக்கத்திலிருந்து வந்த ஒரு கதை. அப்படி உலகைத் தாண்டி தேசப் பிரிவினைகளுக்கு அப்பால் கதைகளை நாம் நேசிக்க தொடங்கியுள்ளோம்.
சொற்களின் மீது அதிகாரம்
நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் கூறுவார்கள். நீங்கள் அனைவரும் கையில் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் டிக்ஸ்னரி. அதுவும் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி. நிறைய பேர் அதில் உள்ள வார்த்தைகளுக்கு பொருள் தேடுவார்கள். நானும் சிறுவயதில் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரி தான் பயன்படுத்தினேன். எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது இந்த டிக்ஸ்னரியை எப்படி தயாரித்து இருப்பார்கள் என்று. யார் உருவாக்கினார்கள், அதனுடைய வரலாறு என்ன என்று யோசித்தேன். டிக்ஸ்னரி உருவான வரலாறு குறித்த நூல்கள் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தபோது ஏராளமான நூல்கள் டிக்ஷ்னேரி உருவான வரலாறு குறித்து இருந்தது. ஒரு டிக்ஸ்னரி உருவாக எவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா? என்று ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். ஒரு டிக்ஸ்னரி கொண்டு உலகம் முழுவதும் சொற்கள் மீது அதிகாரம் செய்துள்ளார்கள். அப்படிப்பட்ட ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி உருவாக்குவதற்கு எப்போது பணிகளை மேற்கொண்டார்கள் என்று தெரியுமா இந்தியா எப்போது தன்னுடைய சுதந்திர எழுச்சிக்காக முதல் சிப்பாய் கலக எழுச்சியை துவங்கியதோ அப்போதுதான் பிரிட்டனின் இது போன்ற ஒரு அகராதியை உருவாக்க வேண்டும் என்று யோசனை அவர்களுக்கு உருவானது. காரணம் என்னவென்றால் காலனி நாடுகள் எல்லாம் அப்போது விழித்துக் கொண்டது.
ஒரு தேசத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அதிகாரமோ ஆயுதமோ தேவையில்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் மொழியையும் சிந்தனையாளர்களையும் கட்டுப்படுத்தினாலே ஒரு நாட்டை அவர்கள் அடிமையாக்கி விடலாம் என்று நினைத்தார்கள். இன்றைக்கும் கூட ஆங்கிலேயர் ஆட்சி அதிகாரம் நம்மை விட்டு போய்விட்டது. ஆனால் அவர்களுடைய மொழி நம்மோடு தான் உள்ளது. அந்த மொழியை அவர்களை விட திறமையாக நாம் கற்றோம். ஆனால் பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன் போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் நம்மை ஆண்டார்கள். ஆனால் அப்போதெல் லாம் அவர்களுடைய மொழியை நாம் கற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் நம் மீது அவர்கள் திணிக்கவும் இல்லை. ஆங்கிலேயர்கள் தங்களுடைய அதிகாரத்தை விட்டுச் செல்லும் போது அவர்களுடைய மொழியையும் நம்மிடம் விட்டுச் சென்று விட்டார்கள். இப்போதும் கூட ஒருவர் ஆங்கிலம் தவறாக மேடையில் பேசினால் நாம் சிரிக்கின்றோம் நாம் சிரிக்க வேண்டிய அவசியமல்ல ஏனென்றால் ஆங்கிலம் நம்முடைய தாய்மொழி அல்ல எனவே நாம் சிரிக்க வேண்டிய அவசியமும் அல்ல.
ஆங்கில அகராதி உருவான வரலாறு
எந்த மொழியையும் விட நம்முடைய மொழி குறைந்தது அல்ல. நம்முடைய மொழி ஈராயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மொழி. அதுவும் செம்மொழியாக உலகமே கொண்டாடக் கூடிய மொழிதான் நம்முடைய தமிழ் மொழி. இதை ஆங்கிலேயர்கள், விரும்பி னாலும் கூட கற்றுக் கொள்ள முடியாது. ஆனால் உலகையே ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்களுடைய மொழியினால் உலகை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்துதான் 1887ஆம் ஆண்டு டிக்ஸ்னரியை உருவாக்க ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒரு மிகப்பெரும் அகராதியை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார்கள். எந்த நாட்டில் ஆங்கிலம் பேசினாலும் அந்த சொல்லுக்கான பொருளை நாம் தான் உருவாக்க வேண்டும். அவர்கள் நிலத்தை அல்ல, நாக்கை அடிமைப்படுத்த நினைத் தார்கள். பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தில் காலனி நாடுகளாக இருந்த பல்வேறு நாடுகளில் வேறு வேறு மொழிகள் உள்ளது இவைகளை ஒரே மொழியில் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த குழு விவாதித்து ஜேம்ஸ் மோரே என்கிற ஒருவர் நான் அந்தப் பணியை செய்கிறேன் என்று பிரிட்டிஷ் ஆய்வுக் குழுவிடம் கூறினார். அப்போது அந்தக் குழு அவரிடம் கூறியது நீங்கள் இந்த பணியை செய்ய வேண்டும் என்றால் முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். நீங்கள் என்ன படித்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு மோரே கூறினார் நான் எதுவும் படிக்கவில்லை என்று கூறினார். பின்னர் எப்படி நீங்கள் மொழி பெயர்ப்பீர்கள் என்று கேட்டதற்கு எனக்கு 17 மொழிகள் தெரியும் என்று மோரே கூறினார். அப்போது அந்த குழு அவரை சோதனை செய்தது ஒரு சொல்லை குறிப்பிட்டு இது எந்தெந்த மொழியில் என்ன சொல்லாக வரும் என்று கேட்டார்கள். அவர் சற்றும் யோசிக்காமல் ஒரே நிமிடத்தில் எந்தெந்த மொழியில் இந்த வார்த்தைகள் வரும் என்று கூறினார்.
உடனடியாக ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி டிக்ஸ்னரி உருவாக்கும் பணி யினை ஜேம்ஸ் மோரேயிடம் கொடுத்தது. நாம் நினைத்திருப்போம் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி டிக்ஸ்னரியை உருவாக்கியது ஒரு மிகப்பெரும் கல்வியாளர் என்று. ஆனால் அதை சரியாக பள்ளிக்கு செல்லமுடியாத ஒருவர்தான் உருவாக்கினார். பல லட்சக்கணக்கான வாக்கியங்களுக்கு உயிர்ச்சொல் எழுத எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று கேட்டபோது 50 அல்லது 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறினார். இல்லை நாங்கள் காலனி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே அதை உருவாக்க வேண்டும் என்றார்கள். எனவே உங்களுக்கு பத்தாண்டுகள் அவகாசம் தருகிறோம் அதற்கு தேவையான அறிஞர்கள் மற்றும் பொருள் உதவி அனைத்தையும் செய்கிறோம். அதற்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்போது ஜேம்ஸ் மோரே ஒன்றை நினைத்தார் இதை மக்கள் தான் உருவாக்க முடியும் என்று நினைத்தார். உடனடியாக தன்னுடைய வீட்டிலேயே ஒரு அலுவலகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் உள்ள காலனி நாடுகளுக்கு முழுவதும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். தங்களுக்கு தெரிந்த கவிதை முக்கியமான வாக்கியங்களின் சொல் எப்படி இருக்கும் என்பதை எனக்கு ஒரு தபால் கார்டின் மூலம் எழுதி அனுப்புங்கள். அது எந்த புத்தகத்தில் உள்ளது என்பதை குறிப்பிட்டு அனுப்புங்கள் என்று ஒரு அறிவிப்பு விட்டார்.
பெண்களை கீழாகத்தான் வைத்திருந்தார்கள்
இந்த அறிவிப்பை தொடர்ந்து தினசரி ஆயிரக்கணக்கான தபால் கார்டுகள் அவருக்கு வந்து சேர்ந்தது. வரும் தபால் கார்டுகளை பிரித்து வைப்பதற்கு கூட ஆளில்லாத நிலையில் தன்னுடைய மனைவி ஆரா, அவருடைய குழந்தைகளை அதில் ஈடுபடுத்தினார். தினசரி வரும் தபால்களை எந்த அகராதியில் வருகிறதோ அந்தந்த வரிசையில் அதை அடுக்கி வைக்க வேண்டும் என்று கூறினார். உடனடியாக அவர்கள் வரும் தபால் கார்டுகள் அனைத்தையும் அந்தந்த வரிசையில் அடுக்கி வைப்பார்கள். அந்த அடிப்படையில் அகராதிகளை அடுக்கி வைப்பதிலும் பாதுகாப்பதிலும் பெண்களும் குழந்தைகளும் மிகப்பெரும் பங்காற்றினார்கள். அதேபோல் தன்னுடைய மொழிகளை பாதுகாத்து விட வேண்டும் என்று உருவாக்கியதுதான் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரி. வெப்சைட் அகராதி, ஜங்ஷன் அகராதி, மோரே அகராதி இவைகளை உருவாக்க உதவிய வர்கள் பெண்கள். ஆனால் அவர்களுக்கு இந்த அகராதியில் ஒரு இடமும் இல்லை. ஆங்கிலேயர்கள் என்றைக்குமே பெண்களை தங்களுக்கு கீழாகத்தான் வைத்திருந்தார்கள். ஆனால் பண்பாட்டிலே பெண்களுக்கு நிகரானவர் யாரும் இல்லை என்று கூறுவார்கள். உங்களுடைய அகராதியிலே பெண்களுக்கு இடமே இல்லையே. இந்த அகராதிகளை உருவாக்கியதில் பெண்க ளுக்கான பங்கு என்பதே அதில் இல்லையே. நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் இது போன்ற ஒரு மிகப்பெரும் பணியினை அன்றைக்கு செய்திருக்கிறார்கள்.
மனநலவாதி
ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரி சொற்களை உருவாக்க உதவிய மனநலவாதி வில்லியம் மைனர் என்ற ஒருவர். தினசரி சொற்களை கட்டு கட்டாக எழுதி இவற்றுக்கு இதில் அர்த்தம் உள்ளது என்று மேற்கோள் காட்டி அனுப்பி வைத்தார். யார் என்று அவரை விசாரித்த போது அவர் மனநலம் பாதிக்கப் பட்ட ஒருவர். பல ஆயிரம் சொற்களுக்கு அகராதிகளை எழுதி கொடுத்துள்ளார். அப்போது அவரை கண்டறிய வேண்டும் என்று மோரே நினைத்து நேரில் சந்தித்த போது அவர் மனநல மருத்துவமனையில் இருந்தார். ஏன் என்று கேட்டபோது நீதிமன்றம் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க அனுப்பி வைத்துவிட்டது என்று கூறினார்கள். அது ஏன் என்று கேட்டதற்கு யுத்த காலத்தில் இவர் குற்றமே செய்யாத ஒருவரை அறுவை சிகிச்சை மூலம் கொலை செய்துவிட்டார். அதிலிருந்து இவர், தான் தவறு செய்யாத ஒருவரை தவறு செய்ததாக கொலை செய்து விட்டோமே என்ற மனவேதனையில் இருந்தார் அதிலிருந்து இவர் யாரை பார்த்தாலும் தன்னை யாரோ கொலை செய்ய வருகிறார்கள் என்ற எண்ணத்திலேயே இருப்பார். அப்போதுதான் சாலையில் இவர் நடந்து செல்லும் போது இவர் அருகில் வந்த ஒருவர் இவரை கொலை செய்ய வந்துள்ளார் என்று நினைத்து அவரை சுட்டுக் கொன்று விட்டார். பின்னர்தான் அவர் யார் என்று கேட்டதற்கு அவர் யார் என்று எனக்குத் தெரியாது ஆனால் என்னை கொலை செய்ய வந்தார். அதனால் நான் சுட்டுக் கொன்றேன் என்று வில்லியம்ஸ் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். நீதிமன்றம் உங்களுக்கு மனநலம் சரியில்லை. எனவே நீங்கள் மருத்துவ மனையில் சென்று மனநல சிகிச்சை பெற வேண்டும் என்று அனுப்பி வைத்துவிட்டார்கள்.
அப்போது வில்லியம்சை பார்க்க வந்த இறந்தவரின் மனைவி நீங்கள் என் கணவரை சுட்டுக் கொன்றுவிட்டீர்கள் பரவா யில்லை. உங்களுடைய மனதில் ஏதோ ஒரு குழப்பம். ஒரு இருட்டு உங்கள் மனதில் இருக்கின்றது. நீங்கள் அதை களைய வேண்டும். அதற்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டபோது. எனக்கு படிக்க புத்தகங்கள் வேண்டும் என்று அவர் கூறி யுள்ளார். அப்போது அவருக்கு நிறைய புத்தகங்களை அந்த பெண்ணும், அதேபோல் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களும் அவருக்கு கொடுத்தார்கள். அந்த புத்தகங் களை எப்போதும் படித்துக் கொண்டே இருக்கும் அவருக்கு ஜேம்ஸ் மோரே அறி விப்பை பார்த்தவுடன் அவர் படித்தவற்றுக்கு தேவையான அகராதிகளை கொடுக்க வேண் டும் என்பதற்காக தினசரி ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதி அனுப்பினார். அப்படி 1879 ஆம் ஆண்டு துவங்கி 1928 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி டிக்ஸ்னரி தயாரிக்கும் பணி முடிந்தது. நான்கரை லட்சம் சொற்களுக்கு ஒரு சொல் அகராதி வேண்டும் என்று 48 ஆண்டுகள் பாடுபட்டு தயாரிக்கப் பட்டது தான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக டிக்ஸ்னரி. இன்றைக்கும் நாம் வாங்கி ஒரு வாக்கியத்தை தேர்ந்தெடுத்து டிக்ஸ்னரியில் சரியாகத்தான் போட்டுள்ளதா என்று பார்க்கின் றோம். சரியாகத்தான் போட்டு உள்ளார்களா என்று கேட்டால் ஒரு இந்தியனாக அது சரியாக போடப்படவில்லை என்றுதான் நான் கூறு வேன். ஏனென்றால் பிரிட்டிஷார் தங்களுடைய இன வேறுபாடு, அவர்களுடைய இன மேலாண் மையை, இன்னும் சொல்லப்போனால் நம்மை எப்படியெல்லாம் அவர்கள் அவமதிக்க முடியுமோ அந்த வகையான சொற்களில் தான் அகராதியை அவர்கள் டிக்ஸ்னரியில் தேடி வைத்துள்ளார்கள்.
மறு ஆய்வு செய்து படிக்க வேண்டும்
காலனி ஆதிக்கத்திற்குப் பின் படிக்கும் போது எல்லாம் மறு ஆய்வு செய்து நாம் அதை படிக்க வேண்டும். அவர்கள் உரு வாக்கிய சொற்களுக்கு பின்னால் எல்லாம் அவர்களுடைய காலனி ஆதிக்கம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த டிக்ஸ்னரி தயாரிக்கும் பணிகள் முடிந்தபின் ஜேம்ஸ் மோரே அரசாங்கத்திடம் போய் கூறியுள்ளார். வில்லியம்ஸ் மைனர் மொழிக்காக மிகப்பெரிய பணியினை ஆற்றி யுள்ளார். எனவே அவரை நாம் விடுவித்து விடலாம் என்று கூறியுள்ளார். உடனடியாக பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை விடுவித்து ஒரு மொழியை உருவாக்க இத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் என்பதற்காக மோரேவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதைப் படித்த போது என் மனதில் என்ன தோன்றியது என்றால் ஒரு மொழியை நேசிப்பவர்கள். அந்த மொழியையே தன்னுடைய வாழ்க்கையாக வைத்திருக்கும் பேராசிரியர்கள் யாரும் இவ்வளவு பெரிய காரியத்தை செய்யவில்லை. பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்ட ஜேம்ஸ் மோரே தான் இதை செய்துள்ளார். அவர் மனதில் தோன்றியது இந்த மொழிகளை எல்லாம் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றே மனதில் இருந்துள்ளது. அதேபோல்தான் 500 ஆண்டுகள் வரலாறு உள்ள ஒரு மொழிக்கு இத்தனை முயற்சிகள் என்றால் 2000 ஆண்டு பழமையா மொழியினை அன்றாட வாழ்வில் நாம் கைவிடுகிறோம் என்றால் நம்முடைய மொழிக்கு நாம் எவ்வளவு பெரிய துரோகம் செய்கின்றோம். 5 லட்சம் சொற்கள் உள்ள தமிழ் மொழியில் 500 சொற்கள் கூட நமக்கு தெரியவில்லையே. நம்முடைய குழந்தை களுக்கு நம்முடைய மொழியினைப் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். ஆங்கிலம் தான் படிக்கிறார்கள் என்று நினைக்காதீர்கள். ஆங்கிலம் படிக்கட்டும். ஆனால் நம்முடைய தாய் மொழியை நாம் விட்டுவிடக்கூடாது.
தமிழ் அகராதி
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆங்கில அகராதிக்கு என்று ஒரு டிக்ஸ்னரியை உருவாக்கினால் தமிழுக்கு என்று உள்ள அகராதியை தமிழ் சொற்றொடர் என்ற ஒரு டிக்ஸ்னரியை உருவாக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் 1919 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் என்ன என்ன சொற்கள் எல்லாம் உள்ளது என்பதை அறிந்து அதை உருவாக்க வேண்டும் என்று யாரிடம் கூறினார்கள் என்றால், வழக்கறிஞராக இருந்த வையாபுரி பிள்ளை அவர்களிடம். தமிழ் அகராதி என்ற ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கூறினார்கள். வையாபுரி பிள்ளை கூறினார். எனக்கு முன்னதாக வெள்ளைக் காரர்கள் அதை செய்து விடுவார்களே என்று கூறியதற்கு நீங்கள் தமிழை நேசிக்கின்றீர்கள். அவர்கள் தமிழைக் கொண்டு வாழ்கிறார்கள். எனவே நீங்கள் தமிழை நேசிப்பவர் என்பதால் உங்களால் அதை செய்ய முடியும் என்று கூறினார்கள். பின்னர் தான் அவர் தமிழில் உள்ள சொற்றொடர்களை ஆய்வு செய்து தமிழ் அகராதியை உருவாக்கினார். இந்த அகராதி உருவாக்கியதை பற்றி ஒரு நூலும் எழுதியுள்ளார். அதில் ஒரு மொழியை காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் மொழிகளை அப்படியே பாதுகாத்து வைக்க வேண்டும். நம்முடைய மொழியில் எந்த ஒரு அந்நிய சொல்லும் வந்தால் அது எங்கிருந்து வந்தது என்பதை குறிப்பிட வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு சொல்லை மட்டும் மிக சிறப்பாக குறிப்பிட்டு இருப்பார்கள், அந்த சொல் (God). கடவுள் என்ற சொல்லுக்கு அடுக்கடுக்காக அகராதிகள் இருக்கும். ஆனால் அந்த சொல்லை அவர்கள் கண்டு பிடிக்கவில்லை. அதை கண்டுபிடித்தவர்கள் ஜெர்மனியர்கள். ஆனாலும் மனிதர்கள் மீது தங்களுடைய காலனி ஆதிக்க நாடுகள் மீதும் டிக்ஸ்னரி என்ற அகராதி மூலம் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இன்றைக்கும் நீங்கள் ஒரு புதிய சொல்லை உருவாக்க வேண்டும் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் கள். ஏனென்றால் அது ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி அகராதியில் இல்லை என்று கூறி விடுவார்கள். இதுதான் இரு வேறு உலகங்கள். அந்த உலகத்தில் எப்படி நடந்தது. இந்த உலகத்தில் எப்படி நடந்தது என்பதை நாம் காணவேண்டும்.
நம்முடைய நாட்டிற்கு டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், யவனர்கள், கிரேக்கர்கள் என்று பலரும் வந்துள்ளார்கள். எந்த மொழியும் நம் தமிழ் மொழியோடு இணைந்து வாழ முடியவில்லை. அப்படி தமிழ் மொழி தனித்துவம் வாய்ந்த மொழி. நான் முதலிலேயே கூறியது போல் பள்ளி படிப்பை முடிக்காத ஒருவர் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரியை உருவாக்கியுள்ளார். ஆனால் மழைக்கு கூட பள்ளிக்கு ஒதுங்காத ஒருவர் சாகித்திய அகாடமி விருது வாங்கியுள்ளார். அவருடைய நூற்றாண்டு இது. அவர்தான் கி.ராஜநாராயணன் (கி.ரா.) கரிசல் காட்டுமண்ணைச் சேர்ந்தவர் அவர்தான்.
அவருடைய நண்பர் கே.ஆர். அழகிரிசாமி அப்படிப்பட்ட கலைஞர்களின் நூற்றாண்டு துவங்குகிறது அதை நாம் இந்த மேடையில் இருந்து துவங்குவோம். கி.ரா.வைபோல் வட்டார மொழிகளை சேகரித்து பாது காத்துள்ளவர்கள் யாரும் கிடையாது, பள்ளிக்குச் செல்பவர்களுக்குக்கூட சொற்களின் அருமை தெரியவில்லை. ஆனால் கி.ராவுக்கு தெரிந்துள்ளது. இந்த பாமரன் நாவில் எத்தனை சொற்கள் நடமாடுகிறது. நாம் எப்படி ஒரு ஆங்கில அகராதியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகின்றோமோ அதே போல் நம்மடைய தமிழ் சொற்களை, தமிழ் அகராதிகளை, தமிழ் சொற்கள் பேசும் வாக்கியங்களை, இலக்கியங்களை நம்மு டைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கனவை கண்டவர்கள் தான் அவர்கள். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வாழ்ந்த அடையாளங்கள் இங்கு இல்லை. ஆனால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த கலை கோயில்கள், ஓவியங்கள், சிற்பங்கள் காலம் முழுவதும் நமக்கு உண்மையை சொல்கிறது. ஆட்சி மாறும்; அதிகாரங்கள் மாறும். ஆனால் கலைகள் என்றைக்கும் மாறாது அந்த கலைகள் உடைய நவீன வடிவம் தான் புத்தகங்கள் அந்த புத்தகத்தை நீங்கள் திறக்கும் போது உங்களுடைய அகமும் திறக்கப்படுகிறது. அவற்றை புரட்ட புரட்ட அறிவும் விரிகின்றது. எனக்கு முன் பல அறிஞர்களும் இந்த தமிழ் சமூகத்திற்கு பல்வேறு படைப்புகளை கொடுத்துள்ளார்கள். அவர்களை போற்றி நிறைவு செய்கின்றேன் என்று பேசினார். தொகுப்பு: ஜெ.பொன்மாறன்