districts

img

தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும் தொழிற்சங்க ஸ்தாபகத் தலைவருமான தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவுநாளையொட்டி மதுரை வண்டியூர் தெப்பகுளம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் தோழர் பி.ராமமூர்த்தியின் புதல்வியர் டாக்டர் ஆர். பொன்னி,  வழக்கறிஞர் ஆர்.வைகை, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன்,  மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின்,  சிபிஎம் பகுதிச் செயலாளர் ஜெ.லெனின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.