மதுரை, ஜூன் 22- பொதுத்துறை நிறுவனங்களை விற்பதைக் கண்டித்தும். அஞ்சல் துறையையும் தனியாருக்கு தாரை வார்க்கும் பிற்போக்குத்தனமான செயலை கண்டித்தும் மதுரை தல்லா குளம் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் - 3 மதுரை கோட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தென்மண்டல செயலாளர் எஸ்.நாராயணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அஞ்சல் - 4 கோட்டச் செயலாளர் எம். ஏ. முருகன் ஆதரித்துப் பேசினார். மதுரை அர சரடி தபால் நிலையம், ஸ்காட் ரோடு தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் தென்மண்டல செயலாளர் வி.ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.