மதுரை,ஜன.17- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு நடைபெற்றது. உலக பிரபலமான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன்-விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கொடியசைத்து தொட ங்கி வைத்தார். அமைச்சர் கள் மூர்த்தி, பிடிஆர்.பழனி வேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏ. வெங்கடேசன், தளபதி, புதூர் பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், திரைப்பட நடிகர் சூரி ஆகி யோர் கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு துவங்கிய போட்டிகள் மொத்தம் 10 சுற்றுக்களாக நடைபெற் றன. இதில் 303 மாடுபிடி வீரர்களும் 825 காளைகளும் களத்தில் இறக்கப்பட்டன. போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளின் உரிமை யாளர்களுக்கும் தங்க நாணயங்களும் தங்க மோதிரங்களும் பரிசாக வழங்கப்பட்டன. சைக்கிள், வாஷிங் மெஷின், கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த வீரர் அபி சித்தர் 26 காளைகளைப் பிடித்து முதல் பரிசை வென்றார்.
இவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் நிஸான் கார் முதல் பரிசாக வழங்கப் பட்டது. முதலிடத்தை வென்ற மாடுபிடி வீரருக்கு பல்வேறு அயலக தமிழ்ச் சங்கங்கள் இணைந்து பசு வும் கன்றும் வழங்கின. 20 காளைகளைப் பிடித்து இரண்டாம் இடத்தை வென்ற மதுரை மாவட்டம் ஏனாதியை சேர்ந்த வீரர் அஜய் என்பவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங் கப்பட்டது. அலங்காநல்லூ ரைச் சேர்ந்த ரஞ்சித் 12 காளைகளை பிடித்து மூன்றாமிடத்தை வென்றார். களத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய புதுக் கோட்டை கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் சார்பில் நிஸான் சொகுசு கார் பரிசாக வழங்கப் பட்டது. மேலும் பசுவும் கன்றும் பரிசாக வழங்கப் பட்டன. இரண்டாம் இடத் தை வென்ற புதுக்கோட்டை யை சேர்ந்த எம்.ஆர்.சுரேஷ் காளைக்கு இருசக்கர வாக னம் (பைக்), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளமலம்பட்டி யை சேர்ந்த பட்டாணி ராஜா என்பவரின் காளைக்கு இரு சக்கர வாகனம் (டிவி எஸ் எக்ஸெல்) பரிசாக வழங் கப்பட்டன. 53 பேர் காய மடைந்தனர். இவர்களில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மரு த்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமைச் சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பரிசு களை வழங்கினர். செய்தி, படங்கள்: பா.ரணதிவே