districts

img

நடந்தே ஆற்றை கடக்கும் மாணவர்கள்: ஆபத்தை உணராத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெல மங்கலம் அருகே உள்ளது ஓட்டப்பன் கொட்டாய் கிராமம். இங்கு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அருகிலுள்ள சின்னட்டி கிராமத்திற்கும், கெலமங்கலம், அரசு மருத்துவமனை, நியாய விலைக் கடைக்கும் செல்ல வேண்டும் என்றால் சனத்குமார் ஆற்றுக்குள் கடந்தாக வேண்டும். மலைகளை ஒட்டியுள்ள இந்த ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை சிதில மடைந்துவிட்டது. சிறு மழை பெய்தால் கூட 4 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் செல்லும். அப்போ தெல்லாம் இரு கரைக்கும் இடையே கயிற்றை கட்டி அதைப் பிடித்துக் கொண்டு உடைகள், புத்தகப் பைகள், மூட்டை முடிச்சுகள் நனைய ஆற்றை கடந்து செல்லும் அவல நிலை நீடிக்கிறது. மழைக் காலங்களில் நான்கு மாதங்களுக்கு மேல் ஆற்றுக்குள் இறங்கி செல்ல முடியாமல் 4 கி.மீட்ட ருக்கு சுற்றித்தான் செல்ல வேண்டும். இதுகுறித்து பலமுறை அதி காரிகளிடம் புகார் அளித்தும் இது வரை கண்டுக் கொள்ளவில்லை.  கிராம மக்கள் மற்றும் பள்ளி மாண வர்களின் ஆப்பாத்தான பயணத்தை முடிவுக்கு கொண்டு வர ஆற்றில் மேம்பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், ஒன்றியச் செயலாளர் ராஜா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். ஒய். சந்திரன்