கரூர், மே 28 - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கரூர் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வீ.மோ கன் தலைமை வகித்தார். கரூர் நகரச் செயலாளர் செல்வம் வரவேற்றார். மாவட் டச் செயலாளர் ஜெயராஜ், மாநில பொதுச் செயலாளர் ச.மயில், துணை பொதுச் செயலாளர் தா.கணேசன், மாநில துணைத்தலைவர் எம்.கே.முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கரூர் மாவட்டத்தில் 7 பேரின் தற்காலிக பணிநீக்க ஆணைகளை ரத்து செய்யக் கோரி 16.5.2022 அன்று மாபெரும் பேரணி மற்றும் பெருந்திரள் முறையீடு நடை பெற இருந்தது. இந்நிலை யில், கரூர் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மதன் குமாரிடம் மே 14 அன்று நடை பெற்ற நேரடி பேச்சுவார்த்தை யில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டத்தை தற்காலிக மாக கைவிடுவதாக மாநில மையம் சார்பாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாரி, தற்காலிக பணிநீக்க ஆணையை ரத்து செய்யா மல், பல நாள்களாக இழுத் தடித்து வந்துள்ளார். பின்பு மே 24 அன்று 3 இடைநிலை ஆசிரியர்களுக்கு விதி களுக்கு புறம்பாக ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் ஆணைகளை வழங்கியுள் ளார். தொடக்கக் கல்வித் துறையில் ஒன்றிய அளவில் முன்னுரிமை வழங்கப்பட்டி ருக்கும் நிலையில், 18 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்கள் 3 பேருக்கு பல கி.மீ. தொலை விற்கு அப்பால் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் 3 பேருக்கு அதே ஒன்றியத் தில் மாறுதல் வழங்கப்பட் டது. பட்டதாரி ஆசிரியர் ஒரு வருக்கு அதே பள்ளியில் பணி யேற்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஒரே குற்றச்சாட் டிற்கு பல்வேறு வகையான தண்டனைகள் என நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பாக ஒன்றி யம் விட்டு ஒன்றியம் மாறுதல் ஆணை வழங்கிய கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.மதன் குமாரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.