districts

img

காஞ்சிபுரம் சிபிஎம் வேட்பாளர் மீது காவல்துறை அதிகாரி தாக்குதல்

காஞ்சிபுரம், பிப்.19- காஞ்சிபுரம் மாநக ராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மு.சூரியபாரதியைக் காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று காலை சூரியபாரதி   சி.எஸ்.எம் நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைச் செலுத்தி விட்டு, வெளியே  வந்து கொண்டிருந்தார்.  அப்போது வளாகத்திலிருந்த காஞ்சி புரம் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பா ளர் கணேஷ் சாந்தா வேட்பாளரை ஆபாசமாக வும், தகாத வார்த்தை களாலும் திட்டிய தோடு அவரை தாக்கத்தொடங்கி னார்.  சூரியபாரதியின் தாயார் கன்னிகாவை பார்த்த வுடன் மேலும் கோபமடைந்த அந்த அதிகாரி, “உன் பிள்ளையைக் கொன்று விடுவேன்’’ என்று  பொது மக்கள் முன்பே மிரட்டிய தோடு சூரியபாரதியை வாக்குச்சாவடியிலிருந்து வெளியே தள்ளினார். இதுகுறித்து கட்சி யின் காஞ்சிபுரம் மாந கர செயலாளர் டி.ஸ்ரீதர் கூறு கையில்,  சிபிஎம் வேட்பாள ரிடம்  காவல்துறை உயரதி காரி அராஜகமாக நடந்து கொண்டது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார். வேட்பாளர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசியும் அடித்தும் மிரட்டிய காவல் கண்காணிப்பாளரின் செயல்  எற்புடைது அல்ல. எனவே அந்த அதிகாரி மீது துறை ரீதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மாவட்ட ஆட்சியர் மற் றும் காவல்துறை கண் காணிப்பாளரைத் கேட்டுக் கொள்வதாகவும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார். காவல்துறை அதிகாரி யால் தாக்கப்பட்டதால் சூரியபாரதி வலது கை முழங்கைக்கு மேல் ரத்த க்கட்டு ஏற்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். தாக்கு தலில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரி  மீது  ஆன்  லைன் மூலமாக புகார் செய்யப்பட்டுள்ளது.