கள்ளக்குறிச்சி,மார்ச்17- உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகத்தில் அர சின் இ-சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல மைச்சரின் உத்தரவுப்படி அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்க ளிலும் மின் ஆளுமை முகமை மூலமாக இ-சேவை மையம் தொடங்கி பொது மக்களுக்கு இணைய வழி சேவை வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக் குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன் அலுவலகத்தில் நடந்த இ-சேவை மையம் திறப்பு விழாவுக்கு ஏ.ஜெ. மணிக்கண்ணன், சங்கரா புரம் தொகுதி எம்எல்ஏ உதய சூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை நகர்மன்றத் தலைவர் கே. திருநாவுக்கரசு, துணைத் தலைவர் உ.சி.வைத்திய நாதன், சின்னசேலம் ஒன்றியக் குழு துணைத் தலைவர் அன்பு மணிமாறன், வட்டாட்சியர் ராஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.