கடலூர், நவ.23- சென்னையிலிருந்து நாகப்பட்டி னத்திற்கு புதுச்சேரி, கடலூர் வழியாக சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இது மட்டும் இன்றி கடலூர் அருகே சிப்காட் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கடலூரிலிருந்து சிதம்பரம் விருத்தாச்சலம் குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல வேண்டு மானால் செல்லங்குப்பம் வழியாக முதுநகர் பச்சையாங்குப்பம் வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். கடந்த சிலநாட்களாக கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வந்ததால் சாலைகள் முழுவதும் உருக்குலைந்தது. இதன் காரணமாக பிரதான முக்கிய சாலையாக இருந்து வரும் கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள செல்லங்குப்பம் முதல் பச்சையாங்குப்பம் வரை சாலைகள் முழுவதும் பெயர்ந்து பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.