கடலூர், டிச. 30- என்எல்சி இந்தியா நிறுவனத்தில் தொடர் விபத்துகள் நடைபெறு கின்றன. எனவே தொழி லாளர்களின் பாதுகாப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக்கோரி, என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் நெய்வேலி புதிய அனல்மின் நிலைய நுழைவு வாயில் முன்பு வெள்ளியன்று (டிச. 30) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி புதிய அனல்மின் நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். நிரந்தரத் தொழிலாளி ஒருவர் உட்பட 4 பேர் காய மடைந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அனல்மின் நிலையத்தில் 4 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அனல்மின் நிலையம் 2-ல் முன்னர் நடந்த மூன்று விபத்துக்களில் 21 தொழிலாளகள் உயி ரிழந்துள்ளனர். விபத்து குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் மேற்பார் வையில் ஆய்வு மேற்கண்ட நிபுணர் குழு வழங்கிய பாதுகாப்பு பரிந்துரைகளை என்எல்சி நிர்வாகம் அனல்மின் நிலையங்களில் அமுல்படுத்துவதில்லை. எனவே, அனல்மின் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாது காப்பு உத்தரவாதம் குறித்த வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கங்களை அழைத்து பாதுகாப்பு குறித்து ஆலைசனைகளை பெற வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. இதில் சிஐடியு தலை வர் டி.ஜெயராமன், பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, பொருளாளர் எம்.சீனிவாசன், நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், குமார், பழனிவேல், சாமுவேல், புண்ணியமூர்த்தி, முருகன், என்.ரமேஷ், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் பேசினர்.