கடலூர்,டிச.23- கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வெள்ளி யன்று(டிச.23) விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடை பெற்றது. இதற்கு ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், “2016 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுகிறது. இரண்டு அடி முதல் வழங்கப்பட்ட கரும்பு கடந்த ஆண்டு முழு கரும்பாக வழங்கப்பட்டது. இதனால் விவ சாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்த்து பண்ருட்டி கடலூர் சிதம்பரம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் விஷம் குடித்து சாவதை தவிர வேறு வழியில்லை. அரசு கொள்முதல் செய் தால் மட்டுமே முழுமையாக விற்பனை செய்ய முடியும். எனவே, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப் பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றார்.