districts

கல் வடிவில் மிதந்த  மர்ம பொருள்:  அதிகாரிகள் விசாரணை

சிதம்பரம், அக் 31- சிதம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சிதம்பரம் அருகே உள்ள கொடியம் பாளையம் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு கல் போன்ற வடிவில் ஒரு பொருள் கிடந்துள்ளது.  அதனை வீட்டிற்கு எடுத்து வந்து வைத்திருந்துள்ளார். கடந்த 2  நாட்களுக்கு முன்பு அவர் அந்த பொருளை தண்ணீரில் போட்ட போது அது மிதந்துள்ளது. கனமாக இருக்கும் கல் எப்படி மிதக்கும் என சந்தேக மடைந்த அவர் அதை சிதம்பரம் இளமை யாக்கினார் கோவில் தெருவில் உள்ள அவரது நண்பரான பொற்கொல்லர் முத்துக்குமரனிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து விபரம் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட கடைக்கு திங்கட்கிழமை சென்று அந்த மர்ம பொருள் குறித்து விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அந்தப் பொருளை எடை போட்டு பார்த்தபோது, அது 1 கிலோ 300 கிராம் இருந்தது. இதனை சம்பந்தப்பட்டவர்களிடம் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அந்தப் பொருளை பெற்றுச் சென்றனர்.   இதுகுறித்து வனத்துறையினர் இது திமிங்கலம் எச்சமாக இருக்கலாம் அல்லது குமுழி வகை கல்லாகக்கூட இருக்கலாம் என்றும், ஆய்வுக்கு பிறகே என்னவென்று தெரிய வரும் என்று தெரிவித்தனர்.