districts

img

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை: ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

கடலூர்,மார்ச் 14- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி. சேவையை வழங்க ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாவட்டத் தலைவர் என்.மேக நாதன் தலைமையில் நடந்த மாநாட்டில் மாவட்டச் செயலாளர் ஐ.மதியழகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலத் தலைவர் சி.கே.நரசிம்மன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ஜெயக்குமார், துணைப் பொது மேலாளர் மதுரை பிரதீப் குமார், உதவிப் பொது மேலாளர் அசோகன், மாநில பொருளாளர் எஸ். நடராஜன், மாநில உதவி செயலாளர் எஸ். முத்துக்குமாரசாமி, மாநில துணைத் தலைவர் மாணிக்க மூர்த்தி, குடி யிருப்போர் சங்கத்தின் பொதுச் செய லாளர் மருதவாணன், ஓய்திவூயர் சங்க மாநிலச் செயலாளர் மனோகரன் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, கே.விஜய்ஆனந்த், மாவட்டப் பொரு ளாளர் பி.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றிய அரசு, தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கு கண்ட னம் தெரிவித்தும், விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இருந்த நிவாரணம் வழங்கக் கோரியும் கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்திற்கு  நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைத்து விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.