ஸ்ரீநகர்:
சுமார் 18 மாதங்களுக்குபிறகு ஜம்மு - காஷ்மீர் முழுவதும் 4ஜி இணைய சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன் சால் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார்.2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்திய அரசு அங்கு மொபைல் இணைய சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புவசதிகளையும் முடக்கியிருந்தது.பிறகு 2020 ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் அதிவேக இணையவசதி அளிக்கப்பட்டது.